SMZ.சித்தீக் | Chief Editor
தற்போது வெளியாகி இருக்கும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் அடிப்படையிலே சம்மாந்துறைக் கல்வி வலயத்தின் இறக்காமம் கல்விக்கோட்டத்திற்குட்பட்ட கமு /சது / றோயல் கனிஷ்ட கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இக்கல்லூரி ஆரம்பித்து 12 வருடங்களுக்கும் ஆகக் கூடுதலாக 23 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் என்பதும் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒரு விடயமாகும். மேலும் இப் பாடசாலையின் சித்தி வீதம் 94.3 யும் வெட்டுப் புள்ளிக்கு மேல் 21.6 வீதமும் பெற்றுள்ளமை பெரும் வெற்றி எனவும் கல்லூரியின் அதிபர் திரு.எம்.ஏ.எம். பஜீர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இது இறக்காமம் கல்விக்கோட்டத்தில் ஒரு மகத்துவமான சாதனையாகப் பதியப்பட்டுள்ளது.
என்பதனையும் இக்கோட்டத்தில் முன்னோடியான ஆரம்பப் பிரிவுப் பாடசாலையாகத் தொடர்ந்தும் தடம் பதித்துள்ளது.
மட்டுமல்லாமல் சம்மாந்துறைக் கல்வி வலையத்தின் அடைவை முன் உயர்த்திக் காட்டிய பெயரையும் கமு /சது / றோயல் கனிஷ்ட கல்லூரி தக்கவைத்துள்ளது.

