கொழும்பு - மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலாக சமிக்ஞை கோளாறு காரணமாகவும், தொடருந்து பணியாளர்களின் நியம வேலை போராட்டத்தின் காரணமாகவும், பல தொடருந்து சேவைகள் தாமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிற்கு பிரவேசிக்கும் மற்றும் கொழும்பில் இருந்து வெளிசெல்லும் அனைத்து தொடருந்து சேவைகளும் இதுவரையில் தாமதமாகவே இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக தொடருந்து திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டு மையத்தைக் கேட்ட போது, இன்று காலை வேளையில் மாத்திரம் இவ்வாறான தாமதம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டது.

