கட்சியின் சட்ட திட்டங்களை மீறி, கட்சித் தலைவரை விமர்சனம் செய்து கொண்டு திரிபவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமைச்சர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அஜித் பீ. பெரேரா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

