நேற்று இரவு 11 மணியளவில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில்
அவிசாவெல்ல வீதியில் உள்ள கடை தொகுதியில் நான்கு கடைகள் தீப்பிடித்து எரிந்து உள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பிரதேச மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஒருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சேதவத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயது பிரியதர்ஷன் என தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன

