அரசாங்க ஊழியர்களுக்கு வேதனத்தை வழங்க நிதி இல்லாமையால் அரசாங்கம், திறைசேரி ஊடாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திலிருந்து 10 பில்லியன் ரூபாயை கடனாக கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.