இன்று காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு பூராகவும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் தொடர்பில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.