இந்தியப் பிதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 11 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்கவுள்ளார்.
சுமார் நான்கு மணி நேரம் மட்டுமே கொழும்பில் தங்கியிருக்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் செங்கம்பள வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடனான சந்திப்புகளின்போது அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக ஆராய்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

