தெரேசா மேய் தலைவர் பதவியில் இருந்து விலகினார்

0

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கு வழிவிடும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார்.

எனினும் அவர் புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பிரதமராகும் வரையில், பிரதமர் பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரெக்சிட் விவகாரத்தில் ஒப்பந்தம் ஒன்றை இணக்கப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ள நிலையில், தெரேசா மேய் பதவி விலகல் தீர்மானத்தை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இதன்படி ஜுலை மாதம் இறுதிக்குள் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top