மூன்று வழக்குகளின் கீழ் கடந்த 9 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சக்விதி ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கியில் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி, 162 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், சக்விதி ரணசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவர் இன்றைய தினம் 5 லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

