சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய கூட்டுப் படையினர் நடாத்திய வான்வழி தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்று நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதேவேளை குறித்த பகுதியிலுள்ள சுமார் 3 லட்சம் பேருக்கு பாதுகாப்பு உறுதி படுத்தப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

