போதிய விளக்கங்களை வழங்க தயார்
முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் தங்கள் தரப்பிலிருந்து போதிய விளக்கங்களை வழங்க தயார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

