கொட்டாவ , பன்னிபிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அவரது மனையினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

