பல்கலைக்கழக அனுமதி பெற்று பகிடிவதை காரணமாக 1987 பல்கலை மாணவர்கள் அவர்களது உயர் கல்வி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
பகிடிவதை தொடர்பில் அரசு இனிமேலும் பொருமைக் கொள்கையை கையாலப்போவதில்லை,என்ற கொள்கையில் இருந்த போதிலும், பகிடிவதை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.என பாராளுமன்றத்தில் கூறினார்.
இத்தகைய பகிடிவதை செயற்பாடுகள் பல்கலைக்கழகளில் நடைபெறாமல் இருக்கம் வகையில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் வேந்தரகள், உபவேந்தர்களுக்கு பகுடிவதையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் பல்கலைக்கழகளில் நிகழும் போது முறைப்பாடு செய்வதற்காக அவசர அழைப்பு (Hot line) சேவையொன்றை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வன்னி அல்லது வவுனியா வளாகம் வடமாகாணத்தின் தனியான பல்கலைக்கழகமாக வர்தமானியினூடாக விரைவில் அறிவிக்கப்படும்.

