கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பின்னர் அவர் பல நாட்களாக மறைந்திருந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் கீழ், இஷாராவைப் போன்று தோற்றமுடைய இளம் பெண் ஒருவரை ஜப்னா சுரேஷ் தேடுகையில், தக்ஷி எனும் பெண்ணைச் சந்தித்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், அவரை வெளிநாட்டுக்கு பணிக்கு அனுப்புவதாகக் கூறிய சுரேஷ் நேபாளத்துக்கு அழைத்துச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தக்ஷி என்ற பெண்ணுக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

