வவுனியா கூமாங்குளத்தில் நேற்று இரவு பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் ஒருவரை துரத்தி சென்றவேளையில் நேற்று இரவு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் பண்டார என்ற பொலிஸ் பெயர் தகடு மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சூழ்ந்துகொண்ட மக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோற்றப்பெற்றுள்ளது.
இந்த பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.