ஐஸ் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப் படையினரினால் ஒருவர் கைது!

0

 



சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு பின்பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (07)  இரவு 07.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


 களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புளக் ஜே கிழக்கு 03, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.ஏ. தில்சான், சார்ஜன் அஜித், சார்ஜன் குமார, விசேட அதிரடிப் படை பொலிஸ் உத்தியோகத்தர்களான மதுசான், ஜயதிர, தரங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top