மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

0

 


நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கொழும்பு-புத்தளம் வீதியில் கட்டுவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) கொழும்பிலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின்  இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நபர்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார்   மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top