பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரச போசாக்கு வேலைத்திட்டத்தை திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலை உணவு வேலைத்திட்டம்
இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களில் 8,956 பாடசாலைகளில் ‘பாடசாலை உணவு வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.