திடீரென சூடுபிடித்த வெள்ளரிப்பழ விற்பனை: கொள்வனவிற்காக குவியும் மக்கள்

Dsa
0

 


அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும் பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.


பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு கேள்வி ஏற்பட்டுள்ளதுடன் 300 ரூபாய் முதல் சுமார் 1000 ரூபாய் வரை  வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை ,மருதமுனை , பாண்டிருப்பு ,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.


குறிப்பாக கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top