மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு கள விஜயமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும்

0


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மல்வத்தை பிரதேச வைத்தியசாலையில்  சுமார் 1.5 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டதுடன் தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்தக்காரரையும் கலந்தாலோசனையும் செய்தனர்.



 நேற்று 2023.01.18 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் குறித்த கள விஜயத்தில் இணைந்து கொண்டதுடன் வேலைத்திட்டத்தை விரைவாக முடிவுறுத்தி அதனை பாவனைக்காக கையளிப்பது தொடர்பிலும்  கலந்தாலோசித்தனர்.



குறித்த நிகழ்வில் வைத்தியசாலையின் நீண்டநாள் தேவைாயாக இருந்த  குளிரூட்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் ஞாபகார்த்தமாக மரமொன்றையும் பணிப்பாளர் நட்டு வைத்தார் .



மல்வத்தை பிரதேச வைத்திய அதிகாரி அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய சாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top