கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

 


கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் சொத்துக்களை கொள்ளையிட வந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (26) காலை சந்தேகநபர்கள் மூவரும் சொத்துக்களை கொள்ளையிட முற்பட்ட போது, ​​அதனை தடுக்க சென்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றைய இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section