ஒவ்வொரு விவசாயிக்கும் 40 லீற்றர் டீசல்!



 கடந்த ஒரு வருடத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

உரம் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா நிவாரணத் தொகை மற்றும் ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக உரிய நிவாரணம் வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
 
பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று அங்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 40 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section