முல்லைத்தீவு நீதிபதி இராஜினாமா!

0


 முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.கடந்த 23ஆம் திகதி அவர் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக குறித்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலங்களில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் நீதவான் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இதேவேளை, குறித்த நீதவான் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தன் பின்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top