அருகம்புல்லின் அதிசய மருத்துவ குணங்கள்

 


தொகுப்பு: எஸ்.பாறா பதூல்


அறுகம்புல் எல்லாவித மண் வளத்திலும் வளரும் . குறுகலான நீண்ட இலைகளையும் , நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் , வரப்புகள் , வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும் . இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும் , விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப் படுகிறது . மருத்துவ குணங்கள் மிருகங்களில் பலம் வாய்ந்ததும் , வேகம் மிக்கதும் , பலன் தருவதும் சாக பட்சிணிகள் தான் ; அதாவது சைவ உணவு சாப்பிடுபவையே ; .யானை , குதிரை , காண்டாமிருகம் , பசு ஆகிய அனைத்தும் சைவ உணவு , குறிப்பாக அறுகம் புல் முதலியனவற்றை சாப்பிடுபவை . குதிரை , முயல் , காட்டுப் பன்றி ஆகியன அறுகம் புல்லை விரும்பிச் சாப்பிடும் . இவை அனைத்தும் அபார வேகம் மிக்கவை . அத்தனைக்கும் அறுகம் புல் ‘ பெட்ரோல் ' மாதிரி . நோய் வந்தால் பூனை , நாய் , கோழி ஆகியன கூட அறுகம்புல்லைக் கடித்துத் துப்புவதைக் காணலாம் .

அறுகம்புல்லில் அடங்கியுள்ள மருந்துப் பொருள்கள் :

அறுகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது . அறுகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன . அவையாவன :

1.மாவுச்சத்து ( புரோட்டீன் ) . 2.உப்புச்சத்து ( சோடியம் )
3.நீர்த்த கரிச்சத்து
4.அசிட்டிக் அமிலம்
5.கொழுப்புச் சத்து
6.ஆல்கலாய்ட்ஸ்
7.அருண்டோயின்
8.பி.சிட்டோஸ்டர 9.கார்போஹைட்ரேடன்
10.கவுமாரிக் அமிலச் சத்து 11.ஃபெரூலிக் அமிலச் சத்து
12. நார்ச் சத்து ( ஃபைபர் )
13 ஃப்ளேவோன்ஸ்
14.லிக்னின்
15.மெக்னீசியம்
16.பொட்டாசியம்
17.பால்மிட்டிக் அமிலம் 18.செலினியம்
19.டைட்டர் பினாய்ட்ஸ்
20.வேனிலிக் அமிலம்
மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன.

மருத்துவப் பயன்கள்

அறுகம்புல் தோல் நோய்களை குணப்படுத்த கூடியது , கண் எரிச்சலை சரிசெய்யும் தன்மை கொண்டது , வயிற்றுப் போக்கை நிறுத்தக் கூடியது , புண்களை ஆற்றவல்லது . வயல்வெளி , புல்வெளியில் வளரக்கூடிய அறுகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன . இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது . நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது . ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது . உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது . அறுகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம் . அறுகம் புல் உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும் , சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது.அற கம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது . அறுகம் புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும் . இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும் .

அறுகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும் . பல்வேறு நன்மைகளை கொண்ட அறுகம்புல் , ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல்தடுக்கிறத . கோடை வெயிலுக்கு அறுகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும் . அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து , இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும் . இதை காலை , மாலை குடித்துவர வயிற்றுபோக்கு , வெள்ளைப்போக்கு சரியாகும் . அறுகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய , குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம் . தேவையான பொருட்கள் : அறுகம்புல் சாறு , மிளகுப்பொடி , நெய் . ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் விட்டு சூடுபடுத்தவும் . இதனுடன் அறுகம்புல் சாறு சேர்க்கவும் . பின்னர் , நீர்விட்டு கொதிக்க வைக்கவும் . இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும் . லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும் .
தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும் .

இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் . வெட்டை நோய்க்கு மருந்தாகிறது . வயிற்று புண்களை ஆற்றும் . சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது . கைகால் வீக்கத்தை போக்குகிறது . மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் , வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அறுகம்புல் சாறு ஆற்றும் . எளிதில் கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது . நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும் , காமம் பெருக்கியாகவும் செயற் படும் . அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகுதல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அறுகம்புல் அருமருந்தாகிறது ஒருவித இனம்புரியாத மயக்கநிலை மறைக்க உதவுகிறது . தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது . சொறி , சிரங்கு , படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அறுகம்புல் குணம்
தரவல்லது . உள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாக கிடைக்ககூடியது ஆகும் . அருகம்புல் உள்ளுக்கு உபயோகிப்பதால் சீதபேதி ரத்தம் கலந்து வருவதாயினும் சீதம் என்னும் சளி கலந்து வருவதாயினும் குணப்படும் . மூக்கில் திடீரென ரத்தம் கொட்டுதல் இதை ( சில்லி மூக்கு ) நோய்க்கும் கைவந்த மருந்தாகவும் உடனடி நிவாரணி யாகவும் அறுகம்புல் அமைகிறது . கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம் , மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது , மூக்கு , ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும் . வெப்பம் தணியும் , மாத விலக்குச் சிக்கல் நீங்கும் . கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.

அறுகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும் . இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும் . இதை பூசுவதால் அரிப்பு , சொரி சிரங்கு , படர்தாமரை , வியர்குரு சரியாகிறது . தோல் நோய்களுக்கு மருந்தாகும் அறுகம்புல் , அக்கி கொப்புளங்கள் , சொரியாசிஸ்சை குணப்படுத்து கிறது . அறுகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து , காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும் . இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை , மாலை குடித்துவர கண் எரிச்சல் , அரிப்பு போன்றவை சரியாகும் . அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும் . அறுகம்புல் 30 கிராம் , கீழாநெல்லிச் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை , மேக அனல் , உடல் வறட்சி , சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு , சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும் . அறுகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும் .

வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி , சிரங்கு , அடங்காத தோல் நோய் , வேர்குரு , தேமல் , சேற்றுப் புண் , அரிப்பு , வேனல் கட்டி தீரும் . அறுகம் வேர் 30 கிராம் , சிறுகீரை வேர் 15 கிராம் , மிளகு 5 கிராம் , சீரகம் 5 கிராம் , ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி , பால் , கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும் . ( மருந்து வீறு கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து , வாய் வயிறு வெந்து காணப்படுதல் ) அறுகம்புல் 100 கிராம் , மிளகு 75 கிராம் , சீரகம் 50 கிராம் , இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45 , 90 , 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண் நோய்கள் தீரும் . ஒரு கிலோ அறுகம்புல் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு , பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத்த எண்ணெயே ( அறுகுத்தைலம் )

கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம் பித்தம் , நெஞ்சுவலி , வயிற்றெரிச்சல் , உடல் வறட்சி , மூலச்சூடு , தலைவெப்பு , நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும் . அறுகம் வேர் , நன்னாரி வேர் , ஆவரம் வேர்ப் பட்டை , குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

" அருகு போல் வேரூன்றி " என்பதில் அருகு வேர் பாதாளம் வரை பாய்ந்து உயிரை தன்னுள் அடக்கி சாகா மூலிகையாக திகழ்வதை அறியலாம் . அதுபோல் தம்பதிகள் இருவரும் ஒருவருள் ஒருவரென கணவர் உயிரை மனைவியும் மனைவி உயிரை கணவனும் உள் அடக்கி வாழ்வது என்பது இதன் பொருளாகும் . இப்படிப்பட்ட அதிசயம் மிக்க எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய இம்மூலிகை மிகவும் மகத்தானது ஒன்றாக கருத வேண்டி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section